×

காதலிக்கு விடுதிக்கட்டணம் செலுத்த காசு இல்லை…. வழிப்பறி செய்து பிடிபட்ட காதலர்கள்!! 

சென்னை தேனாம்பேட்டையில் காதலனுடன் பைக்கில் சென்று, நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் காதலனுடன் பைக்கில் சென்று, நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். தேனாம்பேட்டை பார்த்தசாரதி பேட்டையை சேர்ந்த பிரசன்னா, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி ஆகியோர் நேற்று முன்தினம் ஓட்டுனர் பயிற்சிக்கு சென்று விட்டு, தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்ந்த காதலர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரசன்னாவின்
 

சென்னை தேனாம்பேட்டையில் காதலனுடன் பைக்கில் சென்று, நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். 

சென்னை தேனாம்பேட்டையில் காதலனுடன் பைக்கில் சென்று, நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். 

தேனாம்பேட்டை பார்த்தசாரதி பேட்டையை சேர்ந்த பிரசன்னா, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி ஆகியோர் நேற்று முன்தினம் ஓட்டுனர் பயிற்சிக்கு சென்று விட்டு, தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்ந்த காதலர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரசன்னாவின் கைப்பையை பறித்துச் சென்றுவிட்டார். அதில் செல்போனும், பணமும் இருந்துள்ளது.  கைப்பையை பறித்த காதலன், பின்னால் அமர்ந்திருக்கும் காதலியிடம் கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அதனைவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட காதலர்களை தேனாம்பேட்டை காவலர்கள் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காதலன் பெயர் ராஜூ என்பது, காதலியின் பெயர் ஸ்வேதா என்பதும் தெரியவந்தது.  விசாரணையின்போது ராஜூ,  கல்லூரியில் படிக்கும் ஸ்வேதாவுக்கு விடுதிக் கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டது. இதனால், முதல் முறையாக வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.  ஆனால், கைதேர்ந்த கொள்ளையனாக இருக்கலாம் என்ற அடிப்படையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.