×

“காதலி அழகாக இல்லை; எஸ்கேப்பான காதலன்” வளைத்து பிடித்து திருமணத்தை நடத்தி முடித்த போலீசார்!

விசாரணை நடத்தியதில், கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் கூறியுள்ளார். சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக வெங்கடேஷ் கவிதாவை நீ எனக்கு இனி வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, கணவன் மனைவியாக வழந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று வெங்கடேஷ் மீது சங்கர் நகர் காவல்
 

விசாரணை நடத்தியதில்,  கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் கூறியுள்ளார். 

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் பொழிச்சலூரை  சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக வெங்கடேஷ் கவிதாவை நீ  எனக்கு இனி வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, கணவன் மனைவியாக  வழந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று வெங்கடேஷ் மீது  சங்கர் நகர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை போலீசார் அணுகிய போது  அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்த போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில்,  கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து வெங்கடேஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல இருந்ததைக் கருத்தில்கொண்டும், கவிதா 3 முறை தற்கொலை முயற்சி செய்ததாலும்  உடனடியாக அவர்களுக்குத் திருமணம்  செய்துவைக்க போலீசார் முடிவெடுத்தனர்.  இரு வீட்டார் சம்மதத்துடன் போலீசார்  வெங்கடேஷ் – கவிதாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.  மாலை மாற்றி தாலி கட்டி கொண்ட அவர்கள் கொடுத்த புகாரை  திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.