×

காதலன் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை: பிணமாக தொங்கிய காதலி; போலீசில் சிக்கிய கடிதம்!

தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். சென்னை : காதலன் ஆபாச வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பவானி. மகள் வளர்மதி. தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரியில் வளர்மதி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் மகளை கஷ்டப்பட்டுப் படிக்கவைத்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி வளர்மதி நேற்று முன்தினம் தனது
 

தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

சென்னை : காதலன் ஆபாச வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பவானி. மகள் வளர்மதி. தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரியில்  வளர்மதி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் மகளை கஷ்டப்பட்டுப் படிக்கவைத்து வந்துள்ளார். 

இந்நிலையில் மாணவி  வளர்மதி  நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைச் சற்றும் எதிர்பாராத அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். 
இதையடுத்து தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில், ‘நான் புளியந்தோப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைக் காதலித்து வந்தேன். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.அப்போது அவர் என்னை ஆபாசமாகத் திட்டினார். என்னால் அவர் பேசிய வார்த்தைகளை மறக்க முடியவில்லை.நான் இனியும் வாழ விரும்பவில்லை ‘ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து மாணவியின்  தற்கொலைக்கான காரணம் தெரியவந்ததால், மாணவியின்  கல்லூரி நண்பர்கள்  புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே  ஒன்று கூடி, மணிகண்டன் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த  சம்பவத்தால்  அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.