×

கள்ளக்காதலுக்கு இடையூறு: இரண்டரை வயது குழந்தைக்கு சூடு போட்டு கொடுமை செய்த தாய் கைது!

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதால் இரண்டரை வயது குழந்தைக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி: கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதால் இரண்டரை வயது குழந்தைக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குஞ்சன்விளைவு பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தனது கணவர் செல்வத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஹன்சிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஐந்தாம் தேதி ஊர் திருவிழாவிற்காக பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் வந்த
 

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதால்  இரண்டரை வயது குழந்தைக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி: கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதால்  இரண்டரை வயது குழந்தைக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குஞ்சன்விளைவு பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தனது கணவர் செல்வத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஹன்சிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி ஊர் திருவிழாவிற்காக பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் வந்த மகாலட்சுமி தனது பழைய காதலன் கதிரவனை சந்திக்க நேர்ந்துள்ளது. திருவிழாவிற்குப் பிறகு கணவர் மட்டும் பெங்களூர் செல்ல மகாலட்சுமி சொந்த ஊரிலேயே தங்கி உள்ளார். அப்பொழுது மகாலட்சுமி காதலன் கதிரவனை இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில் குழந்தை ஹன்ஷிகாவுடன் இருவரும் ஊரை விட்டு ஓடியுள்ளனர்.

இதையடுத்து மகாலட்சுமியின் கணவர் போலீசில் புகாரளிக்க மகாலட்சுமி குழந்தையுடன்  நேரில் வந்து காவல்நிலையத்தில் ஆஜரானார். அப்போது குழந்தையின் உடலில் தீக்காயங்களை கண்டு அதிர்ந்து போன போலீசார் இது குறித்து விசாரித்ததில் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை ஹன்சிகாவிற்கு சூடு போட்டதாக மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். இதனால் தாய்  மகாலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது