×

கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த விபரீதம்…கதறி அழுத பெற்றோர்!

6 வயதான சுமுகன், சுதேகன் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர். சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அன்பழகன் தெருவில் வசித்துவருபவர் காந்தி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 6 வயதான சுமுகன், சுதேகன் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே சிறுவர்கள் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளனர்.
 

6 வயதான சுமுகன், சுதேகன் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம்  வகுப்பு படித்து வந்தனர்.

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அன்பழகன் தெருவில் வசித்துவருபவர் காந்தி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 6 வயதான சுமுகன், சுதேகன் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம்  வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே சிறுவர்கள் இருவரும்  கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளனர். அப்போது ஒளிந்துகொள்ளச் சென்ற  சுமுகனை  நீண்டநேரமாகியும் காணவில்லை. இதனால் ஆவடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இதனால் வீட்டின் அருகிலேயே சிறுவனை தேடியுள்ளனர். அப்போது சிறுவன்  சுமுகன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. 

இதையடுத்து சிறுவன்  சுமுகன் சடலமாக மீட்கப்பட்டான். அவனை உடலை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர்  சுமுகன் உடலை மீட்ட போலீசார்  பிரேத பரிசோதனைக்காகச்  சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.