×

கணவருடன் சண்டை.. திருமணம் ஆகி 8 மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி !

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடி தட்டு பகுதியில் வசித்து வருபவர் சிவன்(28). கட்டட வேலை பார்த்து வரும் இவருக்குக் கடந்த மே மாதம் அர்ச்சனா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அர்ச்சனாவின் பெற்றோர் அவரது சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், அர்ச்சனா அவரது மாமா வீட்டிலே வளர்ந்து வந்துள்ளார். அர்ச்சனாவின் மாமா தான் சிவனுடன் இவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். அர்ச்சனாவுக்கு அவரை பிடிக்கவில்லை என்றாலும், தன்னை வளர்த்த மாமாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவரை திருமணம் செய்து
 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடி தட்டு பகுதியில் வசித்து வருபவர் சிவன்(28). கட்டட வேலை பார்த்து வரும் இவருக்குக் கடந்த மே மாதம் அர்ச்சனா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அர்ச்சனாவின் பெற்றோர் அவரது சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், அர்ச்சனா அவரது மாமா வீட்டிலே வளர்ந்து வந்துள்ளார். அர்ச்சனாவின் மாமா தான் சிவனுடன் இவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். அர்ச்சனாவுக்கு அவரை பிடிக்கவில்லை என்றாலும், தன்னை வளர்த்த மாமாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

திருமணம் ஆனதிலிருந்தே இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்துள்ளது. அதே போல நேற்று முன்தினம் இரவும் சண்டை நடந்துள்ளது.  இதனால் மனமுடைந்த அர்ச்சனா நேற்று தன் கணவர் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, மாலை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அர்ச்சனா வலியால் கதறிய சத்தத்தைக் கேட்டு அங்குச் சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, அர்ச்சனா இறந்தது குறித்து அவரது கணவனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 8 மாதத்தில் அர்ச்சனா தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.