×

கணவனின் கள்ளக்காதல்…பெட்ரோல் ஊற்றி கட்டிலோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் மகள்: அதிர வைக்கும் சம்பவம்!

தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையைச் சேர்ந்தவர் கந்தசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் போது கட்டிலோடு எரித்துள்ளார். இதை கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் கந்தசாமி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது தனது மனைவி மகள் சேர்ந்து தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த
 

தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 

நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையைச் சேர்ந்தவர் கந்தசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் போது கட்டிலோடு  எரித்துள்ளார். இதை கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் கந்தசாமி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது தனது  மனைவி மகள் சேர்ந்து தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கந்தசாமிக்கு  வேறு பெண்ணுடன் உறவு  இருந்துள்ளது. இதனால் தனது  சொத்துக்ளை அந்த பெண்ணுக்கு எழுதிவைக்க முடிவுசெய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  மனைவி அங்கம்மாள், அவரின் தாய் எல்லம்மாள் மற்றும் மகள் சாந்தி மூவரும் சேர்ந்து கொண்டு கந்தசாமிக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வெளியில் கட்டிலில் படுக்கவைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. 

இந்த வழக்கில் தொடர்புடைய மனைவி அங்கம்மாள், அவரின் தாய் எல்லம்மாள் மற்றும் மகள் சாந்தி மூவரையும்  போலீசார் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.