×

கடனை திருப்பிக்கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை! வளர்ப்பு நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…

திருப்பத்தூரில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூரில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்னும் பகுதியில் உள்ள தனசேகரன் – ராதா தம்பதியினர் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனசேகர் வாட்டர் கேன் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தன் தொழிலை மேம்படுத்துவதற்காக தனசேகரன் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலை அவரால் மேம்படுத்த இயலவில்லை.
 

திருப்பத்தூரில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூரில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்னும் பகுதியில் உள்ள தனசேகரன் – ராதா தம்பதியினர் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனசேகர் வாட்டர் கேன் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தன் தொழிலை மேம்படுத்துவதற்காக தனசேகரன் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலை அவரால் மேம்படுத்த இயலவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு அவரை தொந்தரவு செய்தனர்.

கடன் தொல்லை அதிகமானதால் தனசேகரன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு தலைமறைவானார். இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். நேற்று கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு ராதாவிடம் நச்சரித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் உடலை எடுக்கவிடாமல் சடலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி போலீசாரை பார்த்து குரைத்தது. ஒருவழியாக நாயை அனுப்பி வைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.