×

கஜா புயல்: நிவாரணம் அளிக்க அதிகாரிகள் நியமனம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன புயலில்
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூருக்கு தாசில்தார்கள் ராஜன்பாபு, சொக்கநாதன் ஆகியோரை 9443663922, 9443663164 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் தாசில்தார் சுரேஷை 9655563329 என்ற எண்ணில் அழைக்கலாம்.