ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா; 144 பேர் பலி
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 21,228 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 29ஆயிரத்து 292ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,25,230 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 12,450 பேர் ஆண்கள், 8,778 பேர் பெண்கள். தமிழகத்தில் 266பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று144 பேர் உயிரிழந்துள்ளார். 58பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 86பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,612ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,112பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,09,450ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.