×

‘எங்க ஊர்ல எல்லாருமே தான் திருடுவோம்…’ தீரன் படப்பாணியில் போலீசாரை மிரட்டிய பெண்!

இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். சென்னையில் கடந்த சில மாதங்களாக மூதாட்டிகளுக்கு ஆட்டோவில் லிப்ட் கொடுத்து அவர்களின் நகைகளை ஆட்டைபோடுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு குற்றவாளி அகிலாவை கைது செய்ய போலீசார் முற்பட்ட போது, தீரன்
 

இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக மூதாட்டிகளுக்கு ஆட்டோவில் லிப்ட் கொடுத்து அவர்களின் நகைகளை ஆட்டைபோடுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு குற்றவாளி அகிலாவை கைது செய்ய போலீசார் முற்பட்ட போது, தீரன்  படப்பாணியில் மொத்த கிராமமே போலீசாரை தடுத்து நிறுத்தி ரகளை செய்துள்ளது. பின்னர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அகிலாவை  போலீசார்  கைது செய்தனர். இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில் அகிலா அளித்த வாக்குமூலத்தில், எங்கள் ஊரில் அனைவருமே திருட்டு தொழில் செய்பவர்கள் தான். நாங்கள் மூன்று குழுக்களாக பிரிந்து ஆட்டோவில் சென்று மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து திருடி வந்தோம்.கடந்த 5 ஆண்டுகளாக  திருடி வரும் எங்கள்  மீது 4 மாநிலங்களில்  வழக்கு உள்ளது’ என்று சர்வசாதாரணமாகக் கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார். 

அவரிடமிருந்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.