×

எக்ஸாமில் பெயில் ஆனதற்கு காரணம் நீ தான்? இத நீ செஞ்சிதான் ஆகணும்: காதலியை மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி!?

தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா: தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். நன்றாகப் படிக்கும் இளைஞரான அவர் முதலாம் ஆண்டு தேர்வில்
 

தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி  காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா:  தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி  காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். நன்றாகப் படிக்கும் இளைஞரான அவர் முதலாம் ஆண்டு தேர்வில் தொலைவியாயி தழுவியுள்ளார். 

இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞர் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனதற்குக் காரணம்  காதலி தான் என்று கூறி, காதலியையே தேர்வு கட்டணத்தைக் கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதை அந்த பெண் மறுக்கவே தன்னுடன் எடுத்த புகைப்படங்களை, உன் தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இந்நிலையில் தனது காதல் விவகாரம் குறித்தும், காதலன் மிரட்டுவதும் குறித்து அந்த பெண் அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.  இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டுதல், அச்சுறுத்துதல், சீட்டிங் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.