உள்ளாட்சித் தேர்தல்: நவ. 15 மற்றும் 16 இல் அதிமுக விருப்ப மனு!
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கோரும் நபர்கள் விருப்ப மனுக்களை கொடுக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000, நகர்மன்ற தலைவர் பதவி ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவி
Nov 10, 2019, 15:03 IST
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கோரும் நபர்கள் விருப்ப மனுக்களை கொடுக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000, நகர்மன்ற தலைவர் பதவி ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவி ரூ.5,000 கட்டணம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ1,500 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணமாக செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.