×

உதயநிதி ஓவரா பேசுராப்ல… தேர்தல் ஆணையரே நடவடிக்கை எடுங்க- குஷ்பு!!

தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், “மோடியே குறுக்குவழியில் வந்தவர். ஜஸ்வந்த் சிங்கா என்பவர் மோடியின் தொல்லை தாங்காமல் வேறு கட்சியில் சென்று இணைந்துவிட்டார். சுஷ்மா ஸ்வராஜ் என ஒருவர் இருந்தார் அவர் மோடி தொல்லையால் இறந்தே விட்டார். அருண் ஜெட்லியும், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்துவிட்டார். வெங்கைய நாயுடுவை ஒதுக்கிவைத்தவர் மோடி. இப்படி பல பேரை ஒதுக்கிவைத்துவிட்டு பதவியில் இருப்பவர்தான் மோடி” என மரியாதை குறைவாக பேசினார். இதுகுறித்து ட்விட்டரில்
 

தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், “மோடியே குறுக்குவழியில் வந்தவர். ஜஸ்வந்த் சிங்கா என்பவர் மோடியின் தொல்லை தாங்காமல் வேறு கட்சியில் சென்று இணைந்துவிட்டார். சுஷ்மா ஸ்வராஜ் என ஒருவர் இருந்தார் அவர் மோடி தொல்லையால் இறந்தே விட்டார். அருண் ஜெட்லியும், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்துவிட்டார். வெங்கைய நாயுடுவை ஒதுக்கிவைத்தவர் மோடி. இப்படி பல பேரை ஒதுக்கிவைத்துவிட்டு பதவியில் இருப்பவர்தான் மோடி” என மரியாதை குறைவாக பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு, “திமுக எவ்வளவு தரக்குறைவாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினே இப்படி மரியாதை குறைவாக பேசுவது சரியா? உங்கள் எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள். எங்களின் இரு தலைவர்களின் மரணத்தை கேலி செய்வது தவறு. உங்களிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் வருவதை கண்டு வெட்கப்படுகிறேன். சித்தாந்தங்களின் அடிப்படையில் போராடுங்கள். உங்கள் தோல்விகளைப் பற்றி பேசுங்கள். பிரதமரைக் குறை கூறியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.

எங்கள் 2 தலைவர்களின் மரணத்தை கூறி வாக்குக்கேட்டது உங்களின் தோல்வியை காட்டுகிறது, நீங்கள் குறை சொல்ல எதுவும் இல்லாதபோது, இதுபோன்ற காரணத்தை தேடி தேடி பேசுகிறீர்கள். இதற்காக உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையே தேர்தல் ஆணையம் உதயநிதியின் அவதூறு பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.