×

இளைஞருடன் மது அருந்திய மாணவிகள்… கல்லூரியிலிருந்து நீக்கியதால் தற்கொலை முயற்சி!?

மாணவிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறையில் மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் இளைஞர் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதில்
 

 மாணவிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக    கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் இளைஞர் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில்  வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக    கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதில் மனமுடைந்த மாணவி  ஒருவர்  தற்கொலைக்கு முயன்றதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.