×

இளம்பெண்ணுக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்த போலி சாமியார் கைது

அருள்வாக்கு கூறுவதாக வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: அருள்வாக்கு கூறுவதாக வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போரூர் அருகே வசித்து வரும் ராஜசேகர் என்பவர், மீஞ்சூர் அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோயிலில் அமாவசை, பவுர்ணமி தினத்தில் அருள்வாக்கு கூறி வந்தார். இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த
 

அருள்வாக்கு கூறுவதாக வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: அருள்வாக்கு கூறுவதாக வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை போரூர் அருகே வசித்து வரும் ராஜசேகர் என்பவர், மீஞ்சூர் அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோயிலில் அமாவசை, பவுர்ணமி தினத்தில் அருள்வாக்கு கூறி வந்தார். 

இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் கோயிலுக்குச் சென்றுள்ளார். 

அப்போது, அவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சாமியார், இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பிச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாமியார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.