இலங்கையில் கரை ஒதுங்கிய 18 நாகை மீனவர்கள்
இலங்கை கடல் சீற்றம் மற்றும் படகு பழுது காரணமாக இலங்கை கரை பகுதியில் 18 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக படகுடன் கரை ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை யாழ் மாவட்டம்மாமுனை கடற்கரை பகுதியில நாகை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள்நாட்டுப்படகில் எரிவாயு இல்லாததால், கரை ஒதுங்கி உள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் மீட்டு உணவளித்துபாதுகாப்பாக வைத்துள்ளனர். அதேபோல் கிளிநொச்சி மாவட்டம் சுழிகுளம் கடற்கரை பகுதியில் நாகையை சேர்ந்த விசைப்படகு
Nov 10, 2020, 20:30 IST
இலங்கை
கடல் சீற்றம் மற்றும் படகு பழுது காரணமாக இலங்கை கரை பகுதியில் 18 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக படகுடன் கரை ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை யாழ் மாவட்டம்மாமுனை கடற்கரை பகுதியில நாகை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள்நாட்டுப்படகில் எரிவாயு இல்லாததால், கரை ஒதுங்கி உள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் மீட்டு உணவளித்துபாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அதேபோல் கிளிநொச்சி மாவட்டம் சுழிகுளம் கடற்கரை பகுதியில் நாகையை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழுதாகி இழுத்துவந்தபோது கயிறு அறுந்து, கரை ஒதுங்கியுள்ளது. அந்த விசைப்படகில் வந்த 14 மீனவர்கள் பத்திரமாக உள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.