×

இறந்த தந்தையின் உடல் முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட மகன்: கலங்க வைக்கும் சம்பவம்!

ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. திண்டிவனம் : இறந்து போன தந்தையின் உடல் முன்பு மகன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி. இவரது மகன் அலெக்சாண்டர். இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜெகதீஸ்வரி என்ற சக ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதுகுறித்து இருவீட்டாரிடமும்
 

ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

திண்டிவனம் : இறந்து போன  தந்தையின் உடல் முன்பு மகன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி. இவரது  மகன் அலெக்சாண்டர். இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜெகதீஸ்வரி என்ற சக ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து இருவீட்டாரிடமும் கூறியுள்ளனர்.  இதனால் இருகுடும்பத்தினர் சம்மதத்துடன் அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், தெய்வமணி உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்துள்ளார் .இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்த  அலெக்சாண்டருக்கு அப்பாவின் மறைவு பேரிழப்பாக இருந்தது. தந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த அவரது ஆசையும் நடக்காமல் போனது. 

இதையடுத்து தந்தையின் உடலின் முன்பாவது தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று  எண்ணிய அலெக்சாண்டர், இதுகுறித்து இரு வீட்டாரிடமும் கூறியுள்ளார். இதற்கு அவர் குடும்பம் மட்டுமில்லாது ஜெகதீஸ்வரி குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இறந்த தந்தையின் கைகளில் தாலியை வைத்து அவரின் உடலுக்கு முன்பாக அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். அப்போது இரு குடும்பத்தாரும் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.