×

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் : தடுப்புச் சுவரில் மோதி விபத்து.. இருவர் பலி !

மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பார்த்திபனூர் என்னும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் இவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமாசாமிபட்டியை சேர்ந்த நண்பர்கள் மூன்று பேர் ஈஸ்வரன், சோலை ராஜ் மற்றும் சத்யா. இவர்கள் மூன்று பேருமே எப்போதும் ஒன்றாக இருப்பார்களாம். இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பார்த்திபனூர் என்னும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் இவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. வண்டியை ஒட்டிச் சென்றவர் வண்டியை
 

மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பார்த்திபனூர் என்னும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் இவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமாசாமிபட்டியை சேர்ந்த நண்பர்கள் மூன்று பேர் ஈஸ்வரன், சோலை ராஜ் மற்றும் சத்யா. இவர்கள் மூன்று பேருமே எப்போதும் ஒன்றாக இருப்பார்களாம். இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பார்த்திபனூர் என்னும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் இவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

வண்டியை ஒட்டிச் சென்றவர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது வண்டி சாலையிலிருந்த தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஈஸ்வரன் மற்றும் சோலை ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சத்யா படுகாயம் அடைந்துள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த ஈஸ்வரன் மற்றும் சோலை ராஜ் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.