×

‘இந்திய உணவுக் கழக அலுவலகத்தில்  வேலை’: ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞர்!

சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அஜினோ சிவதாசன். இவரது நண்பர் ஒருவர் சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு 5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூற, அஜினோ சிவதாசன் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் ஆசையில் முன்பணமாக 3 லட்ச ரூபாயும், வேலை கிடைத்தவுடன் மீதமுள்ள 2 லட்ச ரூபாயைத் தருவதாகவும்
 

சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில்  வேலை வாங்கி  தருவதாக கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அஜினோ சிவதாசன். இவரது நண்பர் ஒருவர் சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில்  வேலை வாங்கி  தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு 5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூற,  அஜினோ சிவதாசன் அரசு வேலை வாங்கிவிட வேண்டும்  ஆசையில் முன்பணமாக 3 லட்ச ரூபாயும், வேலை கிடைத்தவுடன் மீதமுள்ள 2 லட்ச ரூபாயைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் அஜினோ சிவதாசனை  கூட்டிக்கொண்டு வந்து  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவு கார்ப்பரேஷன் அலுவலகத்தில் வைத்து அஜினோவிடம் சுருக்கெழுத்தாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கியுள்ளார்.  இதை தொடர்ந்து நியமன ஆணையைக் கொண்டு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் காட்டியபோது, அது போலியான ஆணை என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து  உணவுக் கழக அலுவலர் ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில்  அஜினோ சிவதாசன் ஏமாந்தது தெரிந்தது. இதுகுறித்து கேரளாவில் புகார் கொடுக்குமாறு அஜினோ சிவதாசனுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.