ஆகஸ்ட் 15 ஆம் தேதி காட்சிப்படுத்தப்படவுள்ள நீராவி இன்ஜின் ரயில்!
வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று 73 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்னக ரயில்வே சார்பில் 164 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் யாரும் பயணிக்க அனுமதியில்லை. ரயில்வே ஊழியர்கள் மட்டுமே பயணிக்கவுள்ளனர். ஆனாலும், பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடி நீராவி இன்ஜின் ரயிலைக் கண்டுகளிக்கலாம் என கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தில் இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நீராவி எஞ்சின் ரயில் ரயில் இயக்கப்படும். கடந்த குடியரசு தினத்திலும் நீராவி இன்ஜின் இயக்கப்பட்டுள்ளது.