×

‘அவள் போன இடத்துக்கே போகிறேன்’…காதலியின் பிரிவால் மரத்தில் பிணமாக தொங்கிய காதலன்!

தனியார் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வசந்த் பள்ளியில் படித்து வந்த காலத்தில் மாணவியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலை சேத்துமாவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், வசந்த் என்ற மகனும் உள்ளனர். வசந்த் கோவையில் உள்ள தனியார் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வசந்த் பள்ளியில் படித்து வந்த காலத்தில் மாணவியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் கடந்த 7
 

தனியார் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  வசந்த் பள்ளியில்  படித்து வந்த காலத்தில் மாணவியை  ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலை சேத்துமாவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.  இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், வசந்த் என்ற மகனும் உள்ளனர். வசந்த் கோவையில் உள்ள தனியார் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  வசந்த் பள்ளியில்  படித்து வந்த காலத்தில் மாணவியை  ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வசந்தின் காதலி  டெங்குகாய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற வசந்த் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லாத வசந்த் தனது  நண்பனுக்கு வாட்ஸ் ஆப்பில் மெஜேஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘காதலி இறந்து விட்டதால், இந்த உலகில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. அவள் சென்ற இடத்துக்கு நானும் போகிறேன்’  என்று குறிப்பிடப்பட்டு  இருந்தார். இதுகுறித்து வசந்தின் அப்பாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து வசந்தை  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தீவிரமாக தேடினர். அப்போது தான் அவர்  சேத்துமாவாய்க்கால் அருகே ஒரு மரத்தில்  தூக்கில்  பிணமாக தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த செல்வபுரம் போலீசார்  வசந்த் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.