×

அவனுக்கு எம்.ஜி.ஆர்னு நினைப்பா..? டி.டி.வி.தினகரனை திட்டித் தீர்க்கும் சசிகலா..!

ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான். தன்னை எம்.ஜி.ஆர்.,னு நினைச்சு செயல்படுகிறானா? என்னிடம் ஒன்றை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு போறான். கட்சியில் ஒவ்வொரு சீனியராக செல்வதை பற்றி சசிகலா கவலைப்படவில்லை. அவர்கள் போகும் அளவுக்கு தூண்டிய டி.டி.வி.தினகரனின் செய்கை தான் அவருக்கு ஷாக் கொடுத்து வருகிறது. ’’ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான். தன்னை எம்.ஜி.ஆர்.,னு நினைச்சு செயல்படுகிறானா? என்னிடம் ஒன்றை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு போறான். ஆனால் அடுத்த சில நாட்களில் எனக்கு வேறு விதமாக
 

ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான். தன்னை எம்.ஜி.ஆர்.,னு நினைச்சு செயல்படுகிறானா? என்னிடம் ஒன்றை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு போறான்.

கட்சியில் ஒவ்வொரு சீனியராக செல்வதை பற்றி சசிகலா கவலைப்படவில்லை. அவர்கள் போகும் அளவுக்கு தூண்டிய டி.டி.வி.தினகரனின் செய்கை தான் அவருக்கு ஷாக் கொடுத்து வருகிறது. ’’ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான். தன்னை எம்.ஜி.ஆர்.,னு நினைச்சு செயல்படுகிறானா? என்னிடம் ஒன்றை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு போறான். ஆனால் அடுத்த சில நாட்களில் எனக்கு வேறு விதமாக தகவல்கள் வருகிறது. பணம், சொத்துக்காக இப்படி நாடகமாடி நம்மை ஏமாற்றுகிறானா? 

எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கிறானா?’’என்று தன்னுடன் இருக்கும்  இளவரசியிடம் கேட்டிருக்கிறார். அவரோ, ’’நான் என்ன சொன்னாலும் தப்பா போய்விடும். என் மகனுக்காக பேசுகிறேன்னு நினைப்பீங்க… உங்க விஷயத்துல நான் எதுவும் தலையிட விரும்பவில்லை. 

நீங்களாச்சு தினகரனாச்சு’’ என  நழுவிட்டாராம். பெங்களூர்காரரான புகழேந்தியும் கட்சி இருக்கும் நிலையை ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிட்டாராம். சில சமயம் அவரை கூட தினகரன் அழைத்து சென்றாலும் தூர நிற்க வைத்துவிடுகிறாராம்.