×

அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்: ஆம்பூரில் பரபரப்பு!

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் 35 வயது மதிக்கதக்க அந்த பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் வனப்பகுதி மலைக்குன்றுகள் அதிகமாக காணப்படும் பகுதியாகும். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு கால்நடைகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர்கள் அங்கு ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் போலீசாருக்கு தகவல்
 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் 35 வயது மதிக்கதக்க அந்த பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் வனப்பகுதி  மலைக்குன்றுகள் அதிகமாக காணப்படும் பகுதியாகும். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு கால்நடைகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று வழக்கம் போல கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர்கள் அங்கு ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை  கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் 35 வயது மதிக்கதக்க அந்த பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. 

மேலும் சடலமானது மலை குன்றின் மீது இருந்ததால் அதை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  இது தற்கொலையா ? கொலையா ? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.