×

அழகு குறைந்துவிட்டதால் விவாகரத்து…வறுமையில் குழந்தையும் வாடும் இளம்பெண்!

கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கோவை சோமனூர் வாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி அடுத்த செல்லப்பன்பாளையத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இதையடுத்து கௌசல்யாவுக்கு அழகு குறைந்துவிட்டது என்று கூறி அவரது கணவர் ரமேஷ் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்
 

கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண்  குழந்தை உள்ளது.  

கோவை சோமனூர் வாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி அடுத்த செல்லப்பன்பாளையத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண்  குழந்தை உள்ளது.  

இதையடுத்து கௌசல்யாவுக்கு அழகு குறைந்துவிட்டது என்று கூறி அவரது கணவர் ரமேஷ் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கௌசல்யா வேறு வழியின்றி  தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதை தொடர்ந்து ரமேஷ் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கௌசல்யாவின் அப்பாவும் இறந்துவிட தற்போது கௌசல்யா எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் வாடுகிறார். 




இந்நிலையில் கௌசல்யா தனக்கும் தன் குழந்தைக்கும் சேர வேண்டிய ஜீவனாம்சத்தை ரமேஷ் கொடுக்க வேண்டும் என்று போலீசில் முறையிட்ட நிலையில் சமீபத்தில் தற்கொலை முடிவுக்கும் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவர் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.