×

அரசு பேருந்து மோதி 3 வயது மகளுடன் பலியான தாய்: பேருந்து ஓட்டுநர் கைது!

வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. திரிசூலத்தைச் சேர்ந்தவர் சுதா. நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு தனது இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட அவர் மடிப்பாக்கம் வழியே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த
 

வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது.  

திரிசூலத்தைச் சேர்ந்தவர்  சுதா. நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு தனது இரு  குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட அவர் மடிப்பாக்கம் வழியே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது.  

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சுதா மற்றும் அவரின் மூன்று வயது மகள் பேருந்து சக்கரத்தில் சிக்கிப் பலியானார்கள். 2 வயது மகன் எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுதா மற்றும் அவரின் மகளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரை  கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.