×

அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வெங்கடேஷ் மரணத்தில் சந்தேகம்… தமிழக காவல்துறையிடம் அறிக்கை கேட்டது சிபிஐ!

அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் பவ் (எ) வெங்கடேசன். இவர் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு வந்த வெங்கடேசன் காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
 

அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் பவ் (எ) வெங்கடேசன்.  இவர் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு  வந்த வெங்கடேசன்  காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த போது  அவரது கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடேசன் மற்றும் கார் ஓட்டுநர்  செல்வம் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தனி உதவியாளர் வெங்கடேசனின் மரணம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான குட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு ஆளான வெங்கடேசனின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வெங்கடேஷ்  மரணம் குறித்து தமிழக காவல்துறையிடம் சிபிஐ அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.