×

அதிமுக-வில் யாரும் முதல்வராகலாம் என்பதற்கு ஈபிஎஸ் சாட்சி: சீண்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சென்னை: அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக-வில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வராக இருந்த ஓபிஎஸ் கட்டாயத்தின் பேரில் தான் ராஜினாமா செய்ததாக அறிவித்து கட்சி தலைமைக்கு எதிராக
 

அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை: அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக-வில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வராக இருந்த ஓபிஎஸ் கட்டாயத்தின் பேரில் தான் ராஜினாமா செய்ததாக அறிவித்து கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் என மூன்று அணிகளாக மாறியது. தொடர்ந்து, டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.

அதிமுக-வில் அணிகள் இணைப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி தரப்பினரால் தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மனக்கசப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முன்பு இருந்தது போல் கட்சிக்குள் அதிகாரமாக #OPanneerselvam பன்னீர்செல்வத்தால் வர முடியாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.