×

அதிமுக கவுன்சிலர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளை! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டப்பட்ட அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் விஜி. இவர் நேற்றுகாலை 11,30 மணியளவில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டப்பட்ட அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரோவில் வைக்கப்பட்டிருந்த
 

இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டப்பட்ட அவரது  வீட்டு  கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் விஜி.  இவர் நேற்றுகாலை 11,30 மணியளவில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால்  வீட்டை பூட்டிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்து மாலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டப்பட்ட அவரது  வீட்டு  கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 75 சவரன்  தங்க நகைகள் உள்ளிட்டவை திருடிப்போயிருந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையிலான போலீசார்,  சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.