×

அண்ணாநகரில் செல்போனில் பேசி கொண்டு மாடியிலிருந்து தவறி  விழுந்த இளைஞர் பலி!

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரவிபாட்டி பனிந்திரன் (22). இவர் அண்ணாநகரில் உள்ள சாந்தி காலனியில் தங்கி, அண்ணா நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகடாமியில் படித்து வந்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரவிபாட்டி பனிந்திரன் (22). இவர் அண்ணாநகரில் உள்ள சாந்தி காலனியில் தங்கி, அண்ணா நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகடாமியில் படித்து வந்தார். கடந்த 30ம் தேதி தங்கியுள்ள அடுக்கு குடியிருப்பு அருகில் உள்ள புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நின்று
 

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரவிபாட்டி பனிந்திரன் (22). இவர்  அண்ணாநகரில் உள்ள சாந்தி காலனியில் தங்கி, அண்ணா நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகடாமியில் படித்து வந்தார். 

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரவிபாட்டி பனிந்திரன் (22). இவர்  அண்ணாநகரில் உள்ள சாந்தி காலனியில் தங்கி, அண்ணா நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகடாமியில் படித்து வந்தார். 

கடந்த 30ம் தேதி தங்கியுள்ள அடுக்கு குடியிருப்பு  அருகில் உள்ள புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நின்று கொண்டு செல்போனில் பேசிய போது கால்தவறி கீழே விழுந்ததில் முதுகு தண்டு மற்றும் தலை, கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனே திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார் மாணவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சொந்த ஊரான ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.