×

அடுத்த 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை!

உள் மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி
 

உள் மாவட்டங்களிலும், தென்  தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

தமிழகம் முழுவதும் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென்  தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு  கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம்,  ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.