×

பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை!

 

திருச்சி அருகே பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி மேல தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவரது மகன் சிவபாலன். இவர் அந்த பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெற்றோருக்கும், சிவபாலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர், கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில், துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சிவபாலனின் இருசக்கர வாகனமும், செல்போனும் கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, ராமலிங்கம் அளித்த தகவலின் பேரில் துவாக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, சிவபாலன் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இதனை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.