×

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோ போலீஸாரின் கவனத்துக்கு எட்டிய நிலையில் அந்த நபரை கண்டுபிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோவில் அரிவாளுடன் நடனமாடிய நபர் மணக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா(30) என்பது
 

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோ போலீஸாரின் கவனத்துக்கு எட்டிய நிலையில் அந்த நபரை கண்டுபிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோவில் அரிவாளுடன் நடனமாடிய நபர் மணக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா(30) என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் வைத்து நடனம் ஆடியதற்காக அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே சென்னை உட்பட பல இடங்களில் பட்டாக்கத்தியை வைத்து வீடியோ வெளியிடுவது, பட்டாக் கத்தியில் கேக் வெட்டுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது போன்ற செயல்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்த்தவே போலீசார் சுப்பையாவை கைது செய்துள்ளனர்.