×

‘உலக எய்ட்ஸ் தினம்’ : அரசு மருத்துவமனையில் நடந்த விழுப்புணர்வு நிகழ்ச்சி!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று எய்ட்ஸ் தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த ஊழியர்களின் புரிதல்கள் கேட்டறியபட்டு கேள்வி பதில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முட
 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று எய்ட்ஸ் தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த ஊழியர்களின் புரிதல்கள் கேட்டறியபட்டு கேள்வி பதில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முட நீக்கியல் நிபுணர் அமீர் சுல்தான், நம்பிக்கை மைய ஆற்றுனர் அந்தோணி பிரான்சிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த மருத்துவமனை மட்டுமின்றி பல இடங்களில் எய்ட்ஸ் குறித்த விழுப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.