×

வேலை முடிந்து இரவில் வீட்டுக்குச்செல்லும் வழியில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து; கழுத்தை தனக்கு தானே அறுத்துக் கொண்ட நபரால் பரபரப்பு

மாங்காடு அடுத்த கோவூர், கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மேரி(45). இவர் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்(50), என்பவர் குடிபோதையில் மேரியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். மேரி வர மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரியை சரமாரியாக குத்தி
 

மாங்காடு அடுத்த கோவூர், கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மேரி(45). இவர் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்(50), என்பவர் குடிபோதையில் மேரியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். மேரி வர மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் மேரிக்கு முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த கத்தி குத்து விழுந்து அலறியபடி கீழே விழுந்தார்.

இதனை கண்டதும் ரவீந்திரன் அதே கத்தியால் தனக்குத் தானே தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

கழுத்தை தனக்குத் தானே அறுத்துக் கொண்ட ரவீந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவீந்திரன் எதற்காக மேரியை அழைத்தார்? கத்தியால் ஏன் குத்தினார்? தனக்குத் தானே ஏன் கழுத்தை அறுத்துக் கொண்டார்? என்பது குறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.