×

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மோதி பெண் பலி!

ஈரோடு ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(54). இவர் நேற்று காலை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராத விதமாக தமிழ்செல்வியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவருக்கு
 

ஈரோடு

ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(54). இவர் நேற்று காலை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராத விதமாக தமிழ்செல்வியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம், ஏற்பட்டு உயிருக்காக போராடினார். மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ்செல்வி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து, குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.