×

“முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள்” – வாபஸ் பெறுவதற்கு கறார் காட்டிய சிறப்பு நீதிமன்றம்!

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவர்கள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த இரு அவதூறு வழக்குகளிலும் இன்று நேரில் ஆஜராகும்படி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
 

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவர்கள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த இரு அவதூறு வழக்குகளிலும் இன்று நேரில் ஆஜராகும்படி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு உட்பட 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப்பெறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவதற்கு முன்பாக உயர் நீதிமன்றத்தில் அனுமதிபெற வேண்டுமென ஆகஸ்ட் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரானையை செப்டம்பர் 17ஆம் தேதி ஒத்திவைத்தார்.