×

மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!

மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கடந்த 5 மாதங்களாக முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு
 

மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கடந்த 5 மாதங்களாக முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தும் நிலையில் கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.