இப்படி கூட மரணம் வருமா..? விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி..!
Sep 1, 2025, 09:36 IST
ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 19; தனியார் நிறுவன ஊழியர். சேர்ந்த ஷர்மிளா (19) கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரசிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வாயில் நுரை வந்து மயங்கி விழுந்தார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஆக.30) இரவு ஷர்மிளா உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணையில் ஷர்மிளாவின் தந்தையும் விஷப்பூச்சி கடியால் பாதிக்கப்பட்டதும், அதே போன்ற பூச்சி கடித்து ஷர்மிளா இறந்ததும் தெரியவந்துள்ளது.