×

ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறப்பா? – சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி

ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறப்பா? – சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த தகவலை பள்ளிக் கல்வித் துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்வது
 

ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறப்பா? – சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி
தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த தகவலை பள்ளிக் கல்வித் துறை மறுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாமல் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஜனவரி மாதம் 6ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித் துறை அறிவித்தது போன்று தகவல் பரவி வருகிறது. இதனால் பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளர். பலர் இந்த தகவல் தவறானது என்று கூறினாலும் சிலர் நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, பள்ளிக்கூடம் திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என்று கூறினார்கள்.