நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபின் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு? அண்ணாமலை கேள்வி!
Dec 10, 2025, 06:20 IST
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்டத் தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாகத் திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துவதாகவும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
. சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? என்றும், திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.