×

மிலாடி நபி ஏன் கொண்டாடுகிறார்கள்?

 

மிலாடி நபி திருநாளை, மிலாத் உன் நபி என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள். இறைதூதர் முகம்மது நபிகளின்பிறந்த தினமாகும். அவரை கெளரவிக்கும் விதமாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புனித மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் முகம்மது நபிகளின் பிறந்த தினம் இஸ்லாமியர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் இத்திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது முகம்மது நபிகள் மனித குலத்திற்கு உரைத்த போதனைகளை பிரதிபலிக்கும் திருநாளாகவும், இஸ்லாமிய மக்களை ஒன்றிணைக்கும் வலிமையான திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பேரணியாக சென்று, தங்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவது வழக்கம். முகம்மது நபிகளின் வாழ்க்கையை எடுத்துரைத்து, சிறப்பு தொழுகை நடத்தி, இனிப்புக்களை பரிமாறிக் கொள்வது வழக்கமாக உள்ளது. நபிகள் நாயகம் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவரது போதனைகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து மீண்டும் தங்களின் ஒற்றுமையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் உன்னத திருநாளாக மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. 

முகம்மது நபிகள் கிமு 570ம் ஆண்டு, சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் 12வது மாதமான ரபி அல் அவ்வல் மாதத்தில் மெக்காவில் பிறந்ததாகவும், இஸ்லாமியம் தோன்றியது முதலே மிலாடி நபி கொண்டாடப்பட்டு வருவதாக சிலர் சொல்லுவது உண்டு. ஃபாதிமிட்கள் தான் முதலில் இந்த பண்டிகையை கொண்டாட துவங்கியதாகவும் சொல்லப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, நேர்மை, பணிவு, தாராள மனப்பான்மை, நீதி ஆகியவற்றின் மாண்புகளை நினைவுகூர்ந்து, அவற்றை போற்றும் தினமாக மிலாடி நபி விளங்குகிறது. மிலாடி நபி, முதன் முதலில் எகிப்தில் கொண்டாடப்பட்டதாகவும், அதற்கு பிறகு 11ம் நூற்றாண்டிலேயே உலகம் முழுவதும் மிலாடி நபி கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மிலாடி நபி கொண்டாடும் முறை :

மிலாடி நபி திருநாளின் போது இஸ்லாமியர்கள் தெருக்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளை வண்ண வண்ண விளக்குகளாலும், பச்சை நிற கொடிகளாலும் அலங்கரிப்பார்கள். பெண்கள் வித விதமான உணவு வகைகளை சமைப்பார்கள். இந்த நாளில் அல்லாஹ் தொழுது, அவரது ஆசிகளை பெறுகிறார்கள். சிலர் மிகவும் பிரபலமான ஹஜ் அல் தர்ஹா, ஜம்மா மசூதி உள்ளிட்ட பிரபலமான இடங்களுக்கும் சென்று தொழுகை நடத்துவது உண்டு. இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மிக முக்கியமான ஒன்றாக இஸ்லாத் குறிப்பிடுகிறது. அல்லாஷ்வின் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் ஏழைகளுக்கும், சிறுவர்களுக்கும் தானங்கள் வழங்குவதால் இறை அருளை பெற முடியும் என நம்புகிறார்கள். குடும்ப உறவுகள் ஒன்று கூடி, தங்களின் குழந்தைகளுக்கு முகம்மது நபிகளின் கதைகளை சொல்லுகிறார்கள். அவரது போதனைகள், கணிவு, கருணை ஆகியவற்றை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.