×

11 ஆம் வகுப்பு எப்போது தொடக்கம்? அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகையின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இடைநிற்றல் உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதே போல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் டிவி வாயிலாகவும் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு இன்னும்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகையின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இடைநிற்றல் உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதே போல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் டிவி வாயிலாகவும் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு இன்னும் 11 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 ஆம் வகுப்பும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் எப்போது தொடக்கப்படும் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர் .