×

வீட்டில் நுழையக் கூடாத உயிரினங்கள் எவை? - அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் தரும் விலங்குகள்

 

வீட்டிற்குள் வரவே கூடாத உயிரினங்கள் எவை என்பதையும், அவைகள் வீட்டிற்குள் வந்தால் எந்த மாதிரியான துன்பங்கள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிற்குள் வரவே கூடாத உயிரினங்கள் :

  • பாம்பு வந்தால் வருமானம் பாதிக்கும்.
  • வெளவால் வந்தால் மனக்கஷ்டம் வரும்.
  • கரையான் வந்தால் பணம் கரையும்
  • கருங்குளவி வந்தால் கெட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்.
  • குரங்கு வந்தால் எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்று அர்த்தம்
  • மூட்டைப்பூச்சி வந்தால் வீட்டில் தரித்திரம் வரும்.
  • தேரை வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
  • ஆமை, உடும்பு போன்றவை வந்தால் தீராத கஷ்டம் வரும்.
  • தேள், பூராண் வந்தால் தீய சக்திகள் வீட்டில் உள்ளதாக அர்த்தம்.
  • தேனிக்கள் வந்தால் வீட்டில் எதிர்மறை சக்திகளை கொண்டு வரும்.
  • சிவப்பு நிற எறும்புகள் வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.
  • கருப்பு நிற பட்டாம்பூச்சி வந்தால் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.
  • கருப்பு பூனை - வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும்.
  • புறா வந்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
  • ஆந்தை வீட்டிற்கு வருவது அபசகுனமாக கருதப்படுகிறது. வீட்டிற்கு ஏதோ ஆபத்து வரப் போவதை தான் இது உணர்த்துகிறது.

கருப்பு எறும்புகள்: உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள கருப்பு எறும்புகள் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. கருப்பு எறும்பு சனி கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. கருப்பு எறும்புகள் உங்கள் வீட்டிற்கு வாயில் முட்டையுடன் வந்தால், விரைவில் கடனில் இருந்து விடுபடுவீர்கள்.

கிளி: ஜோதிட சாஸ்திரப்படி உங்கள் வீட்டிற்கு கிளி வந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. கிளி செல்வத்தின் கடவுளான குபேரனுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.இது புதன் கிரகத்துடன் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது. புதன் மாட்சிமையின் சின்னம். கிளி காமதேவரின் வாகனம் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டிற்குள் நுழைவதால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.

ஆமை:ஜோதிட சாஸ்திரப்படி உங்கள் வீட்டிற்கு ஆமை வந்தால் அது சுபம். மத நூல்களில் நீர்வாழ் விலங்குகளுக்கு சிறப்புப் பங்கு உண்டு. உங்கள் வீட்டிற்கு ஆமை வந்தால், அது நேர்மறை ஆற்றலைக் கொண்டு செல்லும்.ஆமை விஷ்ணுவின் ஆமை அவதாரமாக கருதப்படுகிறது. வீட்டிற்கு அதன் வருகை லட்சுமி தேவியை மகிழ்விக்கிறது மற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியை மேம்படுத்துகிறது.

இந்த உயிரினங்களில் ஏதாவது உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் நீங்கள் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான பரிகாரங்கள், வழிபாடுகளை செய்வதுடன், மீண்டும் அந்த உயிரினங்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி, வீட்டில் தெய்வீக சக்திகள், ஆன்மீக மற்றும் நேர்மறை அதிர்வுகள் எப்போதும் நிலையாக இருப்பவதற்கான பரிகாரங்களை செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் சில மாற்றங்களையும் செய்யலாம். இதனால் நமக்கு ஏற்பட போகும் கெடு பலன்களில் இருந்து விடுபட முடியும்.