×

வீட்டில் படிகாரக்கல் வைத்தால் இவ்வளவு நன்மைகளா? எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?

 

நமது தமிழ் பாரம்பரியத்தில், எதிர்மறை சக்திகள் அல்லது தீய சக்திகள் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட சக்திகளை தடுக்கவும் நீக்கவும் படிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. கருப்பு கயிற்றில் சிறிது படிகாரத்தை பிணைத்து வீட்டின் முன்பகுதியில் தொங்கவிட்டு பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இது வெறும் நம்பிக்கை என்றாலும், மனதில் ஏற்படும் நிம்மதிக்கு இந்த நடைமுறைகள் உதவக்கூடும்.

நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களின் சக்தியை நன்றாக அறிந்தவர்கள். அவர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பல பொருட்கள் இன்று அறிவியல் ரீதியாகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் முக்கியமான ஒன்று படிகாரக்கல்.சித்த மருத்துவத்திலும், நாட்டுமருத்துவ முறைகளிலும் படிகாரம் (Alum) மிகவும் முக்கியமான மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இது உடல்நலத்திற்கு மட்டும் அல்லாமல், ஆன்மீகம், வாஸ்து மற்றும் சூழல் சுத்திகரிப்பு போன்ற பல துறைகளிலும் பயன்படுகிறது.

படிகாரக்கல் இயற்கையாகவே நீரை சுத்தப்படுத்தும் தன்மை, நச்சுகளை உறிஞ்சும் தன்மை, மற்றும் சூழலின் எதிர்மறை ஆற்றலை குறைக்கும் தன்மை கொண்டதாக பாரம்பரிய நம்பிக்கையில் கூறப்படுகிறது.

இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டிலும், தொழில் இடங்களிலும், வாகனங்களிலும் கூட படிகாரக்கல்லை வைத்துக் கொள்வது நல்லது என்று கூறி வந்தனர்.

படிகாரக்கல்லை எந்த இடங்களில் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் படிகாரக்கல் ஒரு சிறிய கண்ணாடி அல்லது மண் கிண்ணத்தில் படிகாரக்கல்லை வைத்து வீட்டின் ஒரு மூலையில் வைத்தால், அது சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் உள்ள மன அழுத்தம், தேவையற்ற தகராறு போன்றவை குறைந்து அமைதி மற்றும் நல்ல ஆற்றல் அதிகரிக்கும்  

வீட்டின் நிலைவாசல் என்பது ஆற்றல்கள் நுழையும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.அந்த இடத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் படிகாரக்கல்லை வைத்து வைத்தால், வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான குறைகள் குறையும் 

தொழில் அல்லது கடை நடத்துபவர்கள் ஒரு சிவப்பு துணியில் படிகாரக்கல்லை கட்டி தொழில் இடத்தின் நிலைவாசல் அருகில் கட்டி வைப்பது ஒரு பாரம்பரிய வழக்கம்.

சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்தின் ஆற்றலை குறிக்கும் அதனால் செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து வைத்தால் தொழிலில் முன்னேற்றம், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு, லாபம் போன்றவை கிடைக்கும் 

சிலருக்கு இரவில் அமைதியான தூக்கம் கிடைக்காமல், அடிக்கடி கெட்ட கனவுகள் வருவது உண்டு.அத்தகையவர்கள் சிறிய படிகாரக்கல்லை தலையணை அருகில் வைத்து தூங்கினால் மன அமைதி கிடைத்து நிம்மதியான உறக்கம் கிடைக்கும்   

படிக்கும் குழந்தைகளின் படிப்பு அறையில் படிகாரக்கல்லை வைத்தால், அது சூழலை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது . இதனால் குழந்தைகளுக்கு கவனம் அதிகரித்து, நினைவாற்றல் மேம்பட்டு, படிப்பில் ஆர்வம் கூடும்  

நம் முன்னோர்கள் சிலர் வாகனங்களில் படிகாரக்கல்லை கட்டி வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.இது தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் விபத்துகள் குறைய வேண்டும் என்ற நம்பிக்கையால் செய்யப்படும் ஒரு பழக்கம்.

பில்லி, சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புசில இடங்களில் படிகாரக்கல்லை தலைமுடி அல்லது கயிறு கொண்டு கட்டி வைத்திருப்பதை பார்க்கலாம். இது பில்லி, சூனியம், ஏவல், தீய சக்திகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கை .

படிகாரம் மருத்துவ ரீதியாகவும் பல பயன்களை தருகிறது.

படிகாரத்தை தண்ணீரில் கரைத்து வாய்க் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் குறையும். பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குறைய உதவும்.

சிறிய காயங்களில் இரத்தப்போக்கு நிறுத்த பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்படாமல் காயத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும், படிகாரம் கலந்த தண்ணீரில் முகம் கழுவினால், முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய் மற்றும் சுருக்கங்கள் குறையும்