×

"எங்களுக்கு 'ஜனநாயகன்' வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்!" - அதிமுக ஐடி விங் வெளியிட்ட வீடியோ..!

 

நீட் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் SFI, DYFI அமைப்பினரும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே நிர்வாகிகள் பலரை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஐடி விங், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மாணவர்களை காவல்துறை குண்டுகட்டாகத் தூக்கி செல்லும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

"குற்றம் செய்பவர்களையும், கொலைகாரர்களையும் விட்டுவிட்டு... நீதிக்காகப் போராடும் இளைஞர்களையும் பெண்களையும் கைது செய்வது தான் இந்த அரசின் லட்சணமா?"

"எங்கே போனார் உங்கள் 'ஜனநாயகன்'? படத்திற்கு டிக்கெட் விற்கப்போய்விட்டாரா?"

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அதிமுக ஐடி விங், "எங்களுக்கு 'ஜனநாயகன்' வேண்டாம், உண்மையான ஜனநாயகம் தான் வேண்டும்! வீதியில் இறங்கி மக்கள் போராடும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்காமல் ஒதுங்கியிருப்பது தான் ஜனநாயகமா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த பதிவு, அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் பேரணி மீதான அடக்குமுறை போராட்டம் பிற மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்த மாணவர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர்.

இருப்பினும், ஜனநாயக வழியில் போராட முற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாகச் சாடியுள்ள அதிமுக ஐடி விங், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படும் காட்சிகளைப் பகிர்ந்து, "மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள்?" எனத் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் எதிர்ப்புக் குரல்களை நசுக்கப் பார்க்கும் இந்த அப்ரோச், தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியையும் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..
ஜனநாயகம் வேண்டும்!

போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா?

வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?

பதில் இருக்கிறாதா?@CMOTamilnadu.#பொய்க்கால்_குதிரை_அரசு pic.twitter.com/bi1dAY3N6z

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 23, 2026