×

“சித்ரா வழக்கில் ஆதாரங்களை திரட்டி வருகிறோம்”… நாளை ஆர்டிஓ விசாரணை ஆரம்பம்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆர்டிஓ விசாரணை நாளை தொடங்குகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதே சமயம் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும் அவர் மரணத்திற்கு கணவர் ஹேமந்த் மற்றும்
 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆர்டிஓ விசாரணை நாளை தொடங்குகிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதே சமயம் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும் அவர் மரணத்திற்கு கணவர் ஹேமந்த் மற்றும் அவரது தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆர்டிஓ விசாரணை நாளை தொடங்குகிறது. கணவரிடம் விசாரணை நடக்கும் நிலையில் சித்ராவின் பெற்றோரிடம் நாளை விசாரணை நடக்கிறது. இதையடுத்து சென்னை எத்திராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு மையத்தை ஆய்வு செய்த காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், சித்ரா வழக்கில் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அதனை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.