×

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரிநீர் திறப்பு : உஷார் மக்களே!

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழையின் தாக்கத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று அறிவித்திருந்தார். அதன் படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சென்னை மீண்டும்
 

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழையின் தாக்கத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று அறிவித்திருந்தார். அதன் படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி 23 அடியை எட்டியயிருக்கும் சூழலில் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதே போல புழல் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.