தவெக மாநாட்டில் அடுத்தடுத்து நிகழும் சோகம்!
தவெக மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கொளுத்தும் வெயிலால் தொண்டர்கள் மயக்கமடைந்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் முகப்பு பகுதியில் கட்சியினுடைய தலைவர் விஜய் ஏற்ற உள்ள பிரமாண்ட கொடி கம்பம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டின் மேடையில் இருந்து வலது புறத்தில் 50 அடி உயரத்தில் பெரியார் , அம்பேத்கர், காமராஜர், விஜய் கட் அவுட்டர் உடன் தற்போது வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்டர்களும், மற்றும் மாநாட்டு மேடையில் இருந்து இடது புறத்தில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், விஜய் கட் அவூட்டரும் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நுழைவு வாயிலில் அரசு தலைமை செயலகம் ஜெயின் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு அதில் மையப்பகுதியில் விஜய் கைகூப்பி வணங்கும் படமும் அவருக்கு இரு புறமுறம் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் , வேலு நாச்சியார் படம் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மாநாட்டில் நடிகர் விஜய் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதனையடுத்து விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாடு நடைபெறும் பகுதியில் குவிந்துவருகின்றனர். இன்று காலை முதலே மாநாட்டு திடலில் காத்திருக்கும் தொண்டர்கள் கொளுத்தும் வெளியிலில் மயங்கிவிழுந்தனர். அவர்களுக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.