×

தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் ரத்து!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக். 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக தற்போது கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்டப் பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல்
 

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக். 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக  தற்போது கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் எனத்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்டப் பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும். 

ஏற்கனவே கடந்த மே மற்றும் ஆகஸ்ட்  மாதங்களில் நடைபெற இருந்த  கிராம சபைக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில்  அக்டோபர் மாதத்திற்கான கிராம சபைக் கூட்டமும் ரத்தாகியுள்ளது.